செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா நகரப் பகுதி உணவகம் மீது தாக்குதல், ஒருவர் கைது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Related posts

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர்ளுக்குள் மறைந்திருக்கும் JVP – சுரேஸ் பிரேமச்சந்திரன்

Maash

மன்னார்-தள்ளாடி சந்தி கரையோரத்தினை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

யாழ். தும்பளை கடற்கரைப் பகுதியில் 300 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்பு..!

Maash