பிரதான செய்திகள்

வவுனியா ,சதொச பகுதியில் மோட்டார் விபத்து

வவுனியா – கூமாங்குளம், சதொச சந்தியில் நேற்று மாலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கூமாங்குளத்திலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிள் மீது வவுனியா நகரிலிருந்து கூமாங்குளம் நோக்கி மதுபான போத்தல்களை ஏற்றிக்கொண்டு சென்ற மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் 20 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை விபத்திற்கு இலக்காகிய இரு மோட்டார்சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2லட்சம் பெறுமதியான தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது..!

Maash

அன்று வசீம் தாஜுதீன் இன்று ஷாகிப் முஹம்மது சுலைமான் நாளை யார்?

wpengine

பசில் வெளிநாடா?கொரோனா வைத்தியசாலையிலா? பல கேள்விகள்

wpengine