பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா சதொச நிலையத்தில் பொருட்கள் பதுக்கல்

(கதீஸ்)
வவுனியா நகரை அண்மித்து அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் சில பதுக்கப்பட்டிருந்த­தாகக் கூறப்பட்டதால் அவை பாவ­னையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கண்டுபிடிக்கப்பட்­டுள்ளன.


மீன் ரின் விலை குறைக்கப்பட்டுள்­ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜ­பக் ஷ வெளியிட்ட விசேட அறிவிப்­பையடுத்து அதனை பொதுமக்கள் கொள்வனவு செய்வதும் நேற்றுஅ­திகரித்துக் காணப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா நகரை அண்­மித்துள்ள சதொச விற்பனை நிலை­யத்தில் காசாளர் மேசையின் கீழ்ப்ப­குதியில் மீன் ரின்கள் இருந்த­போதும் அவை முடிவடைந்து விட்­டதாகத் தெரிவிக்கப்பட்டது.


இதனையடுத்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள பாவ­னையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு பொது மகனொ­ருவர் தகவல் வழங்கியதனையடுத்து சதொச விற்பனை நிலையத்துக்கு விரைந்த பாவனையாளர் அலு­வல்கள் அதிகார சபையினர் பரிசோ­தனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்­தனர்.


இதன்போது களஞ்சிய அறையிலி­ருந்து ஒரு பெட்டி மீன் ரின்னைக் கைப்பற்றியதுடன் காசாளர் மேசையின் கீழ் பகுதியில் இருந்த மீன் ரின்களும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட மீன்டின்களை மக்க­ளுக்கு விற்பனை செய்யுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதி­கார சபையினர் சதொச உத்தியோ­கத்தர்களுக்கு உத்தரவு பிறப்பித்த­மையையடுத்து பொது மக்க­ளுக்கு மீன் ரின் விநியோகிக்கப்பட்டது.

Related posts

இடைக்கால நிதி 96மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

wpengine

சமூர்த்தி நிவாரணம் கோரி மூதூர் கிழக்கு-மேற்கு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

wpengine

புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனம் தனியாருக்குச் சொந்தமாகாது.. போலிப் பிரசாரங்களை நம்ப வேண்டாம்- அமைச்சர் றிசாத்

wpengine