செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா ஓமந்தை பகுதியில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் காலை தனது வீட்டில் உள்ள காற்று அழுத்தும் இயந்திரம் மூலமாக முச்சக்கர வண்டியை சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்த போது தவறுதலாக மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவத்தில் பன்றிக்கெய்தகுளம் பகுதியை சேர்ந்த 50 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வவுனியா பேருந்து நிலைய நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

Maash

சோனிகள் தொப்பி பிரட்டிகள் ரவூப் ஹக்கீம்

wpengine

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ரிஷாட் நடவடிக்கை

wpengine