பிரதான செய்திகள்

வவுனியாவுக்கு சென்ற விளையாட்டு குழுவினர்

வவுனியா – ஓமந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில் மத்திய அரசினால் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் நிர்மாணப் பணிகள் மற்றும் விளையாட்டு அரங்கின் வர்ணப்பூச்சுக்கள் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சம்பத் திஸநாயக்க தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாகாண, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளர், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஐக்கிய தேசியக்கட்சியின் பேரணி இன்று கொழும்பில் இடம்பெற்றது

wpengine

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது. “”நீ, என் உயிர்…”!

Maash

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை

wpengine