பிரதான செய்திகள்

வவுனியாவுக்கு சென்ற விளையாட்டு குழுவினர்

வவுனியா – ஓமந்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் விளையாட்டு அரங்கின் வேலைகளை விளையாட்டுத் துறை அமைச்சின் விசேட குழுவினர் திடீர் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர்.

வவுனியா – ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டப் பகுதியில் மத்திய அரசினால் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு அரங்கு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் நிர்மாணப் பணிகள் மற்றும் விளையாட்டு அரங்கின் வர்ணப்பூச்சுக்கள் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சம்பத் திஸநாயக்க தலைமையிலான குழுவினர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, மேற்கொள்ள வேண்டிய வேலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், மாகாண, மாவட்ட, பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டுத்துறை பயிற்சிவிப்பாளர், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

4 அரசியல் கட்சிளுக்கு தேர்தல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு!

Editor

இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில்வாய்ப்பு!-மனுஸ நானயகார-

Editor

யாழ் பகுதியில் மகனுக்கும் தாய்க்கும் இடையே முரண்பாடு – வீட்டுக்கு மகன் போகாததால் தாய் விரக்தியில் மரணம் .

Maash