செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் வேன் மற்றும் துவிச்சக்கரவண்டிக்கு இடையிலான விபத்தில் ஒருவர் பலி..!

வவுனியா யாழ். வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று வெள்ளிக்கிழமை(4) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான இ. ஜெகதீஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த கயஸ் ரக வாகனம் வவுனியா யாழ் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவருடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? உடனே! தொடர்பு கொள்ளுங்கள்

wpengine

தாய்நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் உறுதி பூணுவோம்! ஐ.தே.க. பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர்

wpengine

முசலி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக எச்.எம்.உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

wpengine