பிரதான செய்திகள்

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அடப்பன்குளம் மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடப்பன்குளம் அம்மன் கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காத 20பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர்.

தமது கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் திடீரென வேறு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Related posts

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு: எர்டோகன்

wpengine

வவுனியாவில் அடிக்கடி தடைப்படும் மின்சாரத்தால் மக்களது இயல்பு நிலை பாதிப்பு

wpengine

மனித உரிமைகளின் வரலாறு

wpengine