பிரதான செய்திகள்

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் தாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்தோம்.
பின்பு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அந்த இடத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் நகரசபைக்கு முன்பாக நாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் புதுவருட தினத்தை முன்னிட்டு நாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு மீண்டும் எமக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை

wpengine

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி! இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மழையால் பாதிப்பு

wpengine

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine