பிரதான செய்திகள்

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

புதுவருடத்தை முன்னிட்டு வவுனியாவில் தாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அங்காடி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வியாபாரிகள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நகரசபைக்கு சொந்தமான இடத்தில் வியாபாரம் செய்து வந்தோம்.
பின்பு துவிச்சக்கரவண்டி பாதுகாப்பு நிலையம் அமைப்பதற்காக அந்த இடத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம்.

இந்த நிலையில் நகரசபைக்கு முன்பாக நாம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி ஓரங்களில் புதிதாக வியாபாரம் செய்வதற்கு வேறு நபர்களுக்கு வவுனியா நகரசபை அனுமதி வழங்கியுள்ளது.

இதனால் புதுவருட தினத்தை முன்னிட்டு நாம் மேற்கொண்டு வரும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நகரசபை வாக்குறுதி வழங்கியது போல் மிக விரைவாக பழைய இடத்தை செப்பனிட்டு மீண்டும் எமக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மட்டக்களப்பு மாவட்டம் போதைவஷ்து பாவனையில் முதலாம் இடம் கவலை அளிக்கின்றது பிரதி அமைச்சர் அமீர் அலி.

wpengine

அரச அலுவலகங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும்-எரிசக்தி அமைச்சு

wpengine

முச்சக்கர வண்டி இறக்குமதிக்கு தயார்.! விலை 20 லட்சம்…!

Maash