பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியாவில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்ட கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கொழும்பிலிருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிராம அலுவலரை மேலதிக விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்ல லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், குறித்த கிராம அலுவலர் தமதுக்கு உடல் நிலை சரியில்லை எனவும், நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததையடுத்து குறித்த கிராம அலுவலரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரிடம் லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை குறித்த கிராம அலுவலர் வவுனியா வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளும், வவுனியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டம்! ஜனாதிபதி நாளை அமெரிக்கா

wpengine

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்! ரணிலுடன் இணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்- கோத்தா

wpengine

“இணைந்த வடகிழக்கு” என்பது தமிழர்களின் கோட்பாடா ? அல்லது சாணாக்கியனின் கொள்கையா ? முஸ்லிம்களுக்கு கொள்கை இல்லையா ?

wpengine