பிரதான செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி அம்பாறையில் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி நேற்று அம்பாறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

யுத்த காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது சொந்தங்களுக்கு நீதி கோரி 2000 நாட்கள் பூர்த்தியாவதையொட்டி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சி, உற்பத்தியாளர்கள் சிரமம் .!

Maash

மலையக அசீஸ்ஸின் 26வது நினைவு! மாணவர்களுக்காக உபகரணம் வழங்கி வைப்பு

wpengine

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் .

Maash