பிரதான செய்திகள்

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவாலும், எதிர்க்கட்சிகளாலும் விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் மற்றும் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திகள் காரணமாக வருட இறுதிக்குள் 6 மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு ஆலோசித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்திருந்தது.

இதேவேளை, வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

குறித்த 6 மாகாணங்களுக்குமான தேர்தலை பழைய விகிதாசார முறையில் நடத்த அரசு தீர்மானித்துள்ளது.

அது தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகளுடனும், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் விரைவில் பேச்சுகளை நடத்த அரசு தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

Related posts

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மைத்திரிக்கு சீட்டுகொடுத்த மஹிந்த

wpengine

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor

அமைச்சரவைக் கூட்டத்தின் நேரத்தை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி

wpengine