பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

(அபு ரஷாத் (அக்கரைப்பற்று)

கடந்த பாராளுமன்ற தேர்தல் அறிவித்தது தொடக்கம் தேசியப்பட்டியலை அவருக்கு தருகிறேன் இவருக்கு தருகிறேன் என அமைச்சர் ஹக்கீம் கூறியே வருகிறார்.வன்னியில் நடாந்த கூட்டத்தில் மீண்டும் தேசியப்பட்டியல் குறித்து பேசியுள்ளார்.இது சாத்தியமானதா?

 

அமைச்சர் ஹக்கீமிடம் இருந்த இரண்டு தேசியப்பட்டியலில் ஒன்று திருகோணமலை தௌபீக்கிற்கு வழங்கப்பட்டு விட்டது.அவர் ஒரு பிரதி அமைச்சராக இருந்தவர்.அவர் இதன் பிறகு தேசியப்பட்டியலை இராஜினாமா செய்வது சாத்தியமற்றது.

 

இன்னுமொன்று சல்மானிடமுள்ளது.அவர் 17 மாதங்கள் தேசியப்பட்டியலில் நீடித்து வருகிறார்.இவரிடமுள்ள தேசியப்பட்டியலை இரண்டு வருடங்களுக்கு ஹக்கீம் வழங்கினால் அட்டாளைச்சேனைக்கு அட்டாளைச்சேனைக்கு ஒன்னரை வருடமளவே தேசியப்பட்டியலை வழங்கலாம்.அட்டாளைச்சேனையா? வன்னியா? என்றால் ஹக்கீம் அட்டாளைச்செனைக்கே முன்னுரிமை வழங்குவார்.

 

இரண்டு வருடம் வன்னிக்கு தேசியப்பட்டியப்பட்டியல் வழங்க வேண்டுமாக இருந்தால் திருகோணமலை தௌபீக் இராஜினாமா செய்ய வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் திருகோணமலை தௌபீக்கை புகழ்ந்து வருவதை பார்க்கின்ற போது அது சிறிதும் சாத்தியமல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.இவைகளை வைத்து சிந்திக்கும் போது வன்னி வாக்குறுதி சிறிதும் சாத்தியமற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

Related posts

தனிப்பட்ட அபிலாஷைகளை மறந்து சமூகத்தின் நலனுக்காக அனைவரும் ஒன்றுபட வேண்டிய தருணம் இது அமைச்சர் றிஷாட்

wpengine

ஆப்பிரிக்கா பயங்கரவாத தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலி!

Editor

மு.கா.தவிசாளரிடமிருந்து உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு மடல்

wpengine