பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வாழ்வாதார நிதியுதவி

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர்.

இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இப்பணம் நேற்று (23.06.2017) மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அலுவலகத்தில் வைத்து திருமதி. சி. சிவபாக்கியம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் தேசிய அமைப்பாளர் திரு. த.யோகராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

வித்தியாவுக்கு ஒரு நீதி? ஹரிஷ்ணவிக்கு ஒரு நீதியா? 6 மாதங்கள் கடந்தும் ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி இல்லை!

wpengine

இஸ்லாமிய பி.பி.சி. செய்தியாளர் நீக்கம்! காரணம் என்ன

wpengine

அம்பாறை முஸ்லிம்களின் பிழையான முடிவுகளே ஆணவத் தலைமைக்கு வழிவகுத்தது.

wpengine