பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் தமிழ் ஆளுநர்

மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லோகேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்காக நியமிக்கப்படும் முதலாவது தமிழ் ஆளுநர் லோகேஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆளுநராக கடமையாற்றினார்.

மேலும் வடக்கு மாகாண ஆளுநர்களாக பதவி வகித்த எஸ்.பலிஹக்கார, ஏ.சந்திரசிறி, டிக்சன் சரத்சந்திர தேல, விக்டர் பெரேரா, மற்றும் மொஹான் விஜேவிக்ரம ஆகியோர் அரசியல் சம்பந்தமில்ல அரச மற்றும் படை அதிகாரிகளாவர்.

Related posts

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

wpengine

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து சட்ட விதிகள் உட்பட அடிப்படை முதலுதவி பயிற்சி

wpengine

பெட்ரோலியக் கூட்டுத்தாபன சூத்திரத்தை செயல்படுத்த ஒரு ஒப்பந்தம்.

Maash