செய்திகள்பிரதான செய்திகள்

வட்டவளை பைனஸ் வனப்பகுதி தீயினால் 10 ஏக்கர் நாசம் .!

வட்டவளை பைனஸ் வனப்பகுதியில் திங்கட்கிழமை (10) ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக அட்டன் வன பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளனர்.

வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள அட்டன் ஓயா அருகே உள்ள வனப்பகுதிக்கும், மவுண்டன் எஸ்டேட்டுக்குச் செல்லும் வீதிக்கும் அருகில் உள்ள வனப்பகுதிக்கு ஒரு குழுவினர் தீ வைத்துள்ளனர். 

வறண்ட வானிலை காரணமாக, தீ வேகமாக மலை சிகரங்களுக்கு பரவி கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தை நாசமாக்கியுள்ளது.

மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளில் நிலவும் வறண்ட சூழ்நிலை வேண்டுமென்றே காட்டுத் தீக்கு வழிவகுத்ததாக ஹட்டன் வன பாதுகாப்பு அலுவலகம் எச்சரித்துள்ளது. (S.R)

பொறுப்பானவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள். 

Related posts

தனக்கு நீதியை பெறமுடியாத றிஷாதால், எப்படி நீதியை வளைக்க முடியும்…?

wpengine

கொலன்னாவையில் மூன்று இளம் பெண்களை காணவில்லை

wpengine

பட்டதாரிகளுக்கு அரச சேவையில் வேலை வாய்ப்பு

wpengine