பிரதான செய்திகள்

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

வட மாகாண சபையின் 100வது அமர்வு அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

எனினும், இன்றைய அமர்விற்கு, 18 உறுப்பினர்களே சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கடந்த மூன்றரை வருடங்களில் 100 அமர்வுகளை மிகத் திறம்பட நடத்தியுள்ளதாக அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பல நெருக்கடிகளை சந்தித்திருந்தாலும், வெற்றிகரமாக 100வது அமர்வினை எட்டியுள்ளதாகவும், இதனை எட்டுவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியமைக்கு அவைத் தலைவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

Related posts

“சகல மாணவர்களுக்கும் உயர்தரம் பிழையான முடிவு”

wpengine

அரசாங்கத்திடம் விலைபோன தமிழ் தேசிய கூட்டமைப்பு

wpengine

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

wpengine