பிரதான செய்திகள்

வடமாகாண அமைச்சர்களுக்கான விசாரணை! ஆளுநர் கோரிக்கை

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான விசாரணைக்குழு தொடர்பில் அச் சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினை அனுப்பி வைக்குமாறு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையை மேற்கொள்வதற்காக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையிலான குழுவிற்கான அனுமதியினை வழங்குமாறும், இதற்கான நிதி அனுமதியும் ஆளுநரிடம் கோரப்பட்டிருக்கின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வட மாகாண சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தினையும் அங்கு மேற்கொள்ள வேண்டியுள்ள விசாரணைகளின் விபரங்களையும் அனுப்பிவைக்குமாறு ஆளுநர் ரெஜினோலட் குரே பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மரிச்சுக்கட்டி 7வது நாள் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் சந்திப்பு

wpengine

சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் பழுதடைந்து

wpengine

மாந்தை கிழக்குப்பிரதேச சபை கட்டடத்தை திறந்து வைத்த விக்கி,ஆனந்தி

wpengine