வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் இன்று வியாழக்கிழமை (19.06.2025) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடினர்.
வவுனியா மாநகரசபை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். ஆளணிகளின் அவசிய தேவை தொடர்பிலும் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தார். வவுனியா மாநகருக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் கோரினார்.
வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு
19.06.2025
வவுனியா மாநகரசபை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநரிடம் கோரிக்கைகள் முன்வைத்தார். ஆளணிகளின் அவசிய தேவை தொடர்பிலும் ஆளுநரிடம் கோரிக்கைவிடுத்தார். வவுனியா மாநகருக்கான முதன்மை திட்டத்தை தயாரிக்குமாறு ஆளுநர் கோரினார்.