செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்திசெய்ய 5000 மில்லியன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவத்தார்.

யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, குறித்த தொகையை செலவு செய்ய தீரமானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த 5000 மில்லியன் மூலம் 8 மாதங்களில் திறம்பட கிராம விதிகளை அபிவிருத்தி செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதி கூறினார்.

மேலும், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்தார்.

Related posts

அல் ஜசீரா ஊடகத்தில் மன்னர் சல்மான் கடவுள்! கட்டுரையாளர் பணி நீக்கம்

wpengine

பேஸ்புக் சமூக ஊடகம் எப்படி பயன்படுத்துவது! விண்ணப்பம் செய்யுங்கள்

wpengine

மிகப்பெரிய சவாலுக்கு முகம்கொடுத்துள்ள நவமணிப் பத்திரிக்கை

wpengine