Breaking
Sat. Apr 20th, 2024

வடக்கு காணிப் பிரச்சினைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து விடுத்திருக்கும் அழைப்பையேற்று அவர்களைச் சந்திக்கவிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னஸே்வரன் நேற்று சபையில் அறிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் கடந்த காலங்களைப் போன்று வடமாகாணத்தில் சட்டவிரோதமான காணி சுவீகரிப்புக்கள் இடம்பெற்று வருவதாக இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறிப்பாக ஆனைக்கோட்டை, கூழாவடி பகுதியில் காணிகள் அளப்பதற்கு நில அளவையாளர்கள் முற்பட்ட போது, அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டமை குறித்தும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.

வடக்கில் காணி சுவீகரிப்பதற்காக 168 திட்டங்கள் இருக்கின்றது. எனவே, காணி சுவீகரிப்பை நிறுத்துவது குறித்து முதலமைச்சர் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார்.

அதன்போது கருத்துத் தெரிவித்த, வடமாகாண முதலமைச்சர்,

வடமாகாண காணி பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.

அந்த கலந்துரையாடலின் போது, காணி சுவீகரிப்பு மற்றும் காணிப்பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துக் கூறவுள்ளேன்.

இதற்கு, உறுப்பினர்கள் தங்களிடமிருக்கும் தரவுகளை கையளிக்குமாறும் அவர் கோரினார்.

சட்டத்திற்கு புறம்பான காணிகள் எடுக்கப்படுகின்ற விடயம் பற்றியும், அதன் பாரதூரங்கள் பற்றியும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தான் எடுத்துக்காட்டி கலந்துரையாடவிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *