அறிவித்தல்கள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் வேலைவாய்ப்பு: வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் பல்வேறு வேலைவாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி உங்களது திறமைகள் மற்றும் தகைமைகளுக்கு ஏற்ப சுமார் ஐந்து வகையான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன.

முந்திக்கொள்ளுங்கள்..
கீழே வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு மற்றும் அதற்கான தகமைக்கு தகுதியானவர்கள் உடனடியாக உங்களது விண்ணப்பத்தை அனுப்பி முந்திக் கொள்ளவும்.

குறிப்பாக பெரிய இயந்திரங்களைக் கையாளக் கூடிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. கேளிக்கை விளையாட்டு இயந்திரங்களை கையாளக் கூடிய வகையிலான பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

தகுதியானவர்களுக்கு மிகச்சிறந்த சம்பளத்துடன் மற்றும் பல நன்மைகளையும் பெறக்கூடிய அரிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல வசதிகளுடன் அமைந்துள்ளது கிளிநொச்சி, இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணை (ReeCha Organic Farm).

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமாக இது காணப்படுகிறது.

மின்னஞ்சல் முகவரி
ஆர்வம் உள்ளவர்கள் junior.hr@reecha.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்க முடியும்.

Related posts

ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி 15 நாள்

wpengine

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் றிசாட் பங்கேற்பு

wpengine

தனி நபர்களினால் உடைக்கப்படும் குளம் – ஆர்ப்பாட்டத்துடன் பிரதேச செயலாளரிடம் மனு கையளித்த மக்கள் .

Maash