பிரதான செய்திகள்

றிஷாட் பதியுதீன் முசலிக்கு 52.80மில்லியன் நிதி ஒதுக்கீடு! வேலைத்திட்டம் ஆரம்பம்

கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் முன்னால் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் பதியுதீன் மன்னார், முசலி பிரதேசத்திற்கு 52.80மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த நிதிக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைகள் தற்போது முசலி பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் முன்னால் அமைச்சர் றிஷாட் மீது அரசியல் ரீதியாக கோபம்கொண்ட அரசியல்வாதிகள் இதனை தடுக்கும் நோக்குடன் பல்வேறு சதிகளையும் மேற்கொண்டுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

இது போன்று முசலி பிரதேசத்தில் உள்ள மக்களின் வீட்டுத்திட்ட தேவையினை பூர்த்தி செய்துகொள்ளும் நோக்குடன் மீள்குடியேற்ற செயலணி ஊடாக 700வீடுகளையும் வழங்கி இதற்கான வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வேலைகளும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Related posts

ஆறுமுகம் தொண்டமானுக்கு சவால் விடுக்கும் வகையில் முரளிதரன் நுவரெலியாவில்

wpengine

கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்கள் உட்பட 4 பேர் மரணம் .

Maash

வில்பத்து வர்த்தமானிக்கு எதிராக கைகோர்க்க தயார் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

wpengine