பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக மன்னாரில் சாத்விகப் போராட்டம்

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள அந்நாட்டு அரச பயங்கரவாதத்தின் இனச்சுத்திகரிப்பு செயற்பாட்டை கண்டித்து மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 5ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை வண்மையாக கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில், அந்த மக்களின் வாழ்வுரிமையினை பாதுகாக்கும் வகையிலும், சர்வதேசத்திற்கு அழுத்தத்தினை கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

எனவே, குறித்த ஜனநாயக போராட்டத்தில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு குரல் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ், சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை பரிசளிப்பு விழா-2016

wpengine

காத்தான்குடி பெண்களுக்கான இஸ்லாமிய பாடநெறி நிலைய திறப்பு விழா (படங்கள்)

wpengine

நாளையுடன் முடிவடையும் அரச ஊழியர்கள் சுற்றுநிருபம்

wpengine