பிரதான செய்திகள்

ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.

ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையே கொழும்பு போராட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டு மக்களைத் துன்பத்துக்குள் தள்ளிய, தேசிய வளங்களை விற்பனை செய்த, அதேபோல் எதிர்காலத்தில் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ராஜபக்ச அரசை வீழ்த்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே வீதியில் இறங்கியுள்ளோம்.இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை எமது போராட்டம் தொடரும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது ஆரம்பம் மட்டுமே, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகர்வுகள் அதிரடியாக இருக்கும். மக்களுடன் அரசு விளையாட முடியாது என்று போராட்டத்தில் பங்கேற்ற ராஜித சேனாரத்ன எம்.பி. தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தீர்மானம் ஒத்திவைப்பு

wpengine

மன்னார் வைத்தியசாலை கட்டுமானம் ,மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி.

Maash

அமைச்சர் தெரிவிக்கும் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை

wpengine