செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்ய தூதரகத்திற்கு இன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்.

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந்து, மடிக்கணினி ஒன்றை கொடுத்து விட்டு அங்கிருந்து உடனடியாக வெளியேறியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, விசேட அதிரடிப்படை, விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் கறுவாத்தோட்டம் பொலிஸார் உள்ளிட்ட குழுவை உடனடியாக தூதரகத்திற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளைத் தொடர்ந்து, கறுவாத்தோட்டம் பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

wpengine

சஜித் தலைமையிலான குழு இன்று விஷேட சந்திப்பு!ஜனாதிபதி முறைமையை நீக்குதல்

wpengine

விஜயதாஸ ராஜபக்ஷவும் கைதாகலாம்

wpengine