முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நாடகத்தால் முக்கிய கூட்டணி ஒன்றுக்கு சிக்கல் ஏற்பவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும், “ரணில் விக்ரமசிங்க பிள்ளையானுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியது எல்லாம் நாடகம் தான்.
அதேவேளை, உதய கம்மன்பில, இராஜபக்ச குழும்பத்தினருக்காகவே பேசுகின்றார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், தற்போது இவர்களின் கூட்டம் தொடர்பில் அனைத்தும் அம்பலமாக வெளிவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.