பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி மூன்றாவது அமைச்சரவை மாற்றம்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அமைச்சுப் பதவிகளிலேயே மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும் விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புத்தாண்டுக்கு முன்னதாக அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன் அமைச்சர் றிஷாட்

wpengine

65 ஆயிரம் வீடுகள்: ‘சர்ச்சைகள் பற்றி அரசு ஆராய்கிறது’- ஹிஸ்புல்லா

wpengine

இன நல்லிணக்க ஆணைக்குழு கோறளைப்பற்று பிரதேச செலகத்தில்

wpengine