பிரதான செய்திகள்

ரணில்,மைத்திரி போல் தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும்

ஜனாதிபதி பிரதமருக்கிடையில் முரண்பாடுகள் உண்டு என்று வெளியிலே சொல்லப்பட்டாலும் அவர்களும் இணைந்தே இருக்கிறார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ்தேசிய சுட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் சிறீ. சபாரத்தினத்தினத்தின் 32வது ஆண்டு இறந்த நினைவு நாள் நிகழ்வு அவர் கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் பகுதியில் இடம்பெற்றது.

இதில் பேசிய அவர், ஜனாதிபதி பிரதமருக்கிடையில் முரண்பாடுகள் உண்டு என்று வெளியிலே சொல்லப்பட்டாலும் அவர்களும் இணைந்தே இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுததுள்ளார்.

இந் நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் கனகரத்னம், கட்சியின் செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்த கொண்டனர்

Related posts

நானாட்டான் பிரதேச செயலாளரின் நடவடிக்கையினால் பாதிக்கப்படும் சமுர்த்தி பயனாளிகள்

wpengine

மனிதநேயமிக்க அரசியல் வாதிதான் இந்த பிரதி அமைச்சர் அமீர் அலி

wpengine

களுத்துறையில் மக்கள் சந்திப்பை மேட்கொண்ட ரிசாட் எம். பி

Maash