பிரதான செய்திகள்

ரணிலின் புதிய தீர்மானம்! பிரதேச சபைகளை நகர சபையுடன் இணைப்பு

தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை, மாநகர சபை அல்லது நகர சபையுடன் இணைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார்.

2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, மிகவும் வினைத்திறனான பொதுச் சேவையை வழங்குவதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் தற்போது 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அடங்கிய 341 உள்ளூராட்சி அதிகார சபைகள் இயங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில உள்ளுராட்சி அதிகார சபைகள் தேவையான வருமான ஆதாரங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும், போதிய வருமான ஆதாரங்கள் இல்லாத சில உள்ளூராட்சி அதிகார சபைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகளை மாநகர சபை அல்லது அவற்றுடன் அண்மித்துள்ள நகர சபையுடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Related posts

ஜேர்மன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

wpengine

தகுதி வாய்ந்த கணக்கியல் கல்வியை வழங்குவதற்கு சான்றிதழ் கணக்காய்வாளர் நிறுவனம் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட்

wpengine

இராஜங்க அமைச்சர் சுஜீவயின் பதவியினை பறிக்க உள்ள மைத்திரி

wpengine