பிரதான செய்திகள்

யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்சவின் பிணை மனு இன்று கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

நிதிச் சலவை மற்றும் பொது சொத்து துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில் யோசித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இதன் பின்னணியில் யோசித ராஜபக்ச, நிசாந்த ரணதுங்க, ரொஹான் வெளிவிட்ட உளிட்ட ஐந்து பேர் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

யோசித உள்ளிட்டவர்களுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதேவேளை, யோசித உள்ளிட்டவர்களை எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெனீவா சுற்றி வளைப்புக்குள் இலங்கை அரசு? கடைசி யுக்தியுடன் அரசு தயார்!

wpengine

மாடு குறுக்கே பாய்ந்தமையால் காருக்கும் தொலைதொடர்பு கம்பத்துக்கும் சேதம்

wpengine

பஸ்ஸில் சத்தமான பாடல் ஒலிபரப்பினால் 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு

wpengine