பிரதான செய்திகள்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன இன்று வியாழக்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

அதன்பின்னர், பௌத்த, இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டினை தொடர்ந்து பதிவேட்டில் கையொப்பமிட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மாத்தளை பொலிஸ் பிரிவில் சிரேஸட் பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய இவர் யாழிற்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டார்.

தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், சட்டம் மற்றும் நீதிக்கு அமைவாக யாழில் நடைபெறும், குற்றச்செயல்களை தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நீதியின் வழியில் மேற்கொள்வேன் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.1530504660Police

Related posts

புதிய அரசியலமைப்புச் சட்டம்! தென் பகுதியில் அச்சம் -தம்பர அமில தேர்ர்

wpengine

முச்சக்கர வண்டிகளை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம்

wpengine

மன்னார் அரிப்பு பகுதியில் கடற்படையினரை தாக்கியதாக விளக்க மறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களை புகைப்படம் எடுத்தமைக்கு சிறைச்சாலை பணிப்பாளரிடம் மன்னார் நீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது.

wpengine