செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழ்.நாவற்குழியில் விடுதி முற்றுகை – பெண்கள் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணம்- நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவற்குழி தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமான வகையில் வீட்டில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இன்றைய தினம் (9) யாழ்.மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 68 வயதான வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதுடன் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து,கைதான நால்வரையும் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

18 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள தபால் தொழிற்சங்கங்கள்.

Maash

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள்

wpengine

தனிப்பட்ட காரணத்திற்காக பணிப்பாளர் நாயகம் ஹிஷினி பதவி விலகல்

wpengine