பிராந்திய செய்திமுல்லைத்தீவுயாழ்ப்பாணம்

யாழ் இளைஞன் முல்லைத்தீவு நீர்நிலையில் சடலமாக..!

முல்லைத்தீவு – வற்றாப்பளை பகுதியில் 16 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து உறவினர் வீட்டுக்கு வருகை தந்த குறித்த சிறுவன் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்ததாக தெரிய வருகிறது.

இதனை அடுத்து அருகில் இருந்த நீர் நிலை ஒன்றில் இருந்து இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

16 வயதுடைய இந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு நீரில் வீசப்பட்டாரா? அல்லது விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

யாழில் சட்டவிரோத 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது..!

Maash

யாழ் பகுதியில் மகனுக்கும் தாய்க்கும் இடையே முரண்பாடு – வீட்டுக்கு மகன் போகாததால் தாய் விரக்தியில் மரணம் .

Maash

வவுனியாவில் உள்நாட்டு துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளுடன் ஐவர் கைது .

Maash