பிரதான செய்திகள்

யாழ்ப்பாண கனியவளத்துறை அதிகாரியின் ஊழல்

யாழ் கனியவளத்துறை அதிகாரியின் ஊழல் தொடர்பாக கடந்ததினம் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன இதன் காரணமாக குறித்த நபரே செய்தி வெளியிட்டார் எனும் சந்தேகத்தில் அவரின் மணல் களஞ்சியசாலைக்கு இன்றைய தினம் குறித்த ஊழல் அதிகாரியால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொய்யான பல குற்றச்சாட்டுக்களை அவர் மேல் சுமத்தி அக் களஞ்சியசாலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபரை மணல் ஊழல் அதிகாரியுடன் இணைந்து செயற்படும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் சில ஆதரவாளர்கள் தொலைபேசியில் மிரட்டியுள்ளை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஊழல் அதிகாரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் மணலே இல்லாத போதும் 1500 கியூப் மணல் அள்ளுவதற்கு அனுமதிப்பத்திரம் கொடுத்துள்ளது.

இவரின் ஊழலின் உச்சத்தை காட்டுகிறது எனலாம் மேலும் குறித்த அதிகாரி யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன் இணந்து பல பொய்யான பெயர்களில் அனுமதிப்பத்திரம் தயார் செய்து மணல் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் இவ் செயற்பாடு காரணமா குறித்த ஊழல்வாதிக்கு எதிராக ஜனாதிபதிக்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் இவரால் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.

பொய்யா பெயர்களில் குறித்த அதிகாரியால் தயாரிக்கப்பட்ட மணல் அனுமதிப்பதிரம்.

Related posts

புத்தளம் உழ்ஹிய்யா விடயம்! காட்டுமிராண்டி தனமாக நடந்துகொண்ட பள்ளிவாசல் செயலாளர்! ஊர் மக்கள் கண்டனம்

wpengine

தகவல் அறியும் சட்டம் ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு

wpengine

வவுனியா ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்! ஊடகவியலாளருக்கு தடைபோட்ட திலீபன்

wpengine