செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் சட்டவிரோத 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது..!

யாழில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 4255 கடல் அட்டைகளுடன் 17 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் வினயாசோதி கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போதே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சுமார் 4255 கடலட்டைகள் மற்றும் 04 டிங்கி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், மணியத்தோட்டம், உதயபுரம், குருநகர், குருநாரு பன்னக்குறுப்பு மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 21 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக நடவடிக்கைகளுக்காக, கடலட்டைகள், நான்கு டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களுடன் யாழ்ப்பாணம் சட்டப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

wpengine

மஹரகம வர்த்தக நிலைய தீ மூட்டிய சம்பவம்! சந்தோக நபர் கைது

wpengine

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

wpengine