பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (15) உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Related posts

கடந்த காலப்பகுதிகளில் 39 தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ, காணாமல் ஆக்கப்பட்டோ உள்ளனர்.

Maash

மீள்குடியேற்ற செயலணியின் நிதியை சீரழித்த முன்னாள் பிரதியமைச்சர் காதர் மஸ்தான்

wpengine

முல்லைதீவில் கட்டுப்பணத்தைச் செலுத்தியது தமிழரசுக் கட்சி!

Maash