செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தியாழ்ப்பாணம்

யாழில் ஆழ்கடல் தொழிலுக்கு 4 நாள்களுக்கு முன் 6 பேருடன் சென்ற படகு மாயம்.!!!!

யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் கடற்றொழிலுக்காக நான்கு நாள்களுக்கு முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 கடற்றொழிலாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.

இவ்வாறு கடற்றொழிலாளர்களுடன் பயணித்த படகானது இன்று(24) அதிகாலை வரை கரை திரும்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

wpengine

இலங்கை மத்திய வங்கியில் காணாமல் போன 50 இலட்சம் ரூபா!

Editor

ரணிலின் பதவிக்கு வந்த சோதனை! சிங்கள இணையம்

wpengine