பிரதான செய்திகள்

யானை விடயத்தில்; வனஜீவராசிகள் திணைக்களத்தின் காலம் கடந்த ஞானம்

காட்டு யானைகள் பிரவேசிக்கும் பகுதிகளுக்கு அண்மையில் பயணிக்கும் ரயில்களில் இன்று முதல் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ரயில் மார்க்கங்களை கண்காணித்து ரயில் சாரதிகளுக்கு வழிகாட்டுவதற்கே அவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அதற்கமைய தலைமன்னார் முதல் மதவாச்சிக்கு இடைப்பட்ட ரயில் மார்க்கத்திலும், மதவாச்சி தொடக்கம் கிளிநொச்சி வரையான ரயில் மார்க்கத்திலும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தபடவுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.எஸ்.கே பத்திரத்ன குறிப்பிட்டுள்ளார்.

செட்டிக்குளம் பகுதியில் ரயிலில் மோதுண்டு நான்கு காட்டு யானைகள் உயிரிழந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ரயிலில் மோதுண்டு 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தொலைபேசி கட்டண உயர்வு! கொழும்பில் கையெழுத்து வேட்டை

wpengine

தேவையான திருத்தங்களைச் செய்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சமர்ப்பிப்போம்!-விஜேதாஸ ராஜபக்ஷ-

Editor

மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு?

wpengine