பிரதான செய்திகள்

மோடியுடன் நானும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ருவான்வெல்லையில் உள்ள விகாரையொன்றில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசாக பூரணை தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நாளை மாலை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச விசாகப் பண்டிகை நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

இதன் பின்னர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை திறந்துவைப்பதுடன், நோர்வூட் மைதானத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டமொன்றிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்த நிலையில், மோடி இலங்கையில் பங்கேற்கும் நிகழ்வில் தாமும் பங்கேற்க உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.

Related posts

நெல்லையும்,அரிசியினை பதுக்கி வைப்போருக்கு அமைச்சர் அதிரடி நடவடிக்கை

wpengine

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

wpengine

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine