பிரதான செய்திகள்

மே மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்- ஜனாதிபதி

2017 மே மாதம் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன்  இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், எந்த சந்தரப்பத்திலும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தத் தயார் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இதற்கான பணிகள் இன்னும் முழுமையடையவில்லை எனவும், அதனால்தான் தேர்தல் நடைத்துவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அடுத்த வருடம் மே மாதம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

மின் பாவனையாளர்களுக்கு விசேட சலுகைகள் -இலங்கை மின்சார சபை

wpengine

வில்பத்து காடழிப்பு தண்டனை வழங்கப்பட வேண்டும்

wpengine

பணிப்பகிஸ்கரிப்பு முடிவு! இணைந்த நேர அட்டவணை விரைவில் அமுல்படுத்தப்படும் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine