பதுளை – துன்ஹிந்த பகுதியில் நேற்று (21) மாலை இரண்டு வளைவுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
சுற்றுலாக் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பேருந்து, துன்ஹிந்த 4 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது தொடர்பான பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.