பிரதான செய்திகள்

மூன்று ஆளுநர்களை எச்சரிக்கும் மஹிந்த

எதிர்வரும் பொதுத்தேர்தலின்போது மாகாண ஆளுநர்கள் எந்தவொரு தேர்தல் பிரசாரங்களிலும் பங்கேற்கக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய கோரியுள்ளார்
ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக மூன்று ஆளுநர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் ஒருவர் தமது பதவியில் இருந்து விலகுமாறு கோரப்பட்டுள்ளார். ஏனைய இருவரும் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.


ஆளுநர்களை பொறுத்தவரையில் அவர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே மஹிந்த தேசப்பிரிய இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்

Related posts

நாளை அல்லது நாளை மறுதினம் இந்த பதவி ஏற்பு நிகழ்வு நடைபெறலாம்

wpengine

மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணத்திற்கு கணக்கு இல்லை,நிர்வாகம் தெரியாது விசனம்

wpengine

சமூக ஊடகம்! அரேபிய வசந்தமும்,டிசம்பர் மழையும் வினுப்பிரியா தற்கொலையும்!

wpengine