பிரதான செய்திகள்

முஸ்லிம் உரிமையாளரின் தனியார் ஆடை நிறுவனம் தீ

இரத்மலானை – பொருபன வீதியில் அமைந்துள்ள தனியார் ஆடை நிறுவன களஞ்சியசாலையில் இன்று தீ பரவியது.

களஞ்சியசாலையில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பரவிய தீயினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்கு 2 மணித்தியாலங்கள் சென்றுள்ளன.

தீயை அணைப்பதற்கு தெஹிவளை, கல்கிசை மற்றும் மொரட்டுவ மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்களும் இரத்மலானை விமானப்படையினரின் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டன.

தீ பரவியதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

எதிர்கட்சி தலைவராக மஹிந்த! அதிரடி நடவடிக்கை விரைவில்

wpengine

மன்னார்-தள்ளாடி சந்தி கரையோரத்தினை தூய்மைப்படுத்த வீதிக்கு வந்த மன்னார் அரசாங்க அதிபர்

wpengine

மத்திய அரசு வழங்கும் நிதியை சரியாக பயன்படுத்த தெரியாத முதலமைச்சர்

wpengine