பிரதான செய்திகள்

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்

சாதாரண முஸ்லிம் மக்கள மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால், இதனை தொடர்ந்தும் கட்டுப்படுத்த முடியாது போனால், அரசாங்கத்தில் இருப்பதா இல்லை என அரசியல் தீர்மானத்தை எடுக்க நேரிடும்.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் நடந்து மூன்று வாரங்ள் எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. எனினும் திடீரென முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் ஒருதிட்டமிட்ட செயல்.

இதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காது போனால், விரைவான தீர்மானத்தை எடுக்க போவதாகவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அதிர்வுக்கு என் அவசர வேண்டுகோள் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

wpengine

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

சமூக ஊடகம்! அரேபிய வசந்தமும்,டிசம்பர் மழையும் வினுப்பிரியா தற்கொலையும்!

wpengine