பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முசலிப்பிரதேசத்தில் அடக்கம் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

.

அரசாங்கம் கொரோனவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள நிலையில் எங்கு அடக்கம் செய்வது என்ற முடிவு எடுப்பதில் அரசுக்குள் இழுபறி நிலவுகிறது. என முசலி பிரதேச தவிசாளர் A.G.H. சுபிகான் தெரிவித்துள்ளார்.

முசலி மண்ணில் அடக்கம் செய்வதற்கு எந்த பிரச்சினையும் இல்லை கடந்த சில நாட்களுக்கு முன்னர் எந்த இடத்தில் அடக்கம் செய்வது என்று நிபுணர்குழுவிற்கு சிபாரிசு செய்வதற்காக கொழும்பில் இருந்து வந்த குழு முசலி பிரதேசத்தில் ஒரு இடத்தினை உறுதிப்படுத்தியது அந்த இடம் அடக்கம் செய்ய மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்.

மேலும் முசலி பிரதேசபையில் 2020/11/19 ம் திகதி சபையில் என்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை (mups/2020/11/33/253) உபதவிசாளர் எம் ரயீசுத்தின் அவர்கள் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு!

Editor

மாவடிப்பள்ளியில் நடந்தது என்ன..?

wpengine

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிப்பு

wpengine