பிரதான செய்திகள்

முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் இரத்த தானம் வழங்கி வைப்பு

 இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் ஏற்பாட்டில், மன்னார் – முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இரத்த தானம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இரத்த தான நிகழ்வு மன்னார் வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியின் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

இதில், இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கீழ் உள்ள மாந்தை மற்றும் உயிலங்குளம் இராணுவ முகாமைச் சேர்ந்த 151 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.

இந்த இரத்த தான நிகழ்வில் முருங்கன் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் மற்றும் இராணுவத்தின் 542வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சுப் பதவி எனக்குத் தேவையில்லை-பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்

wpengine

சரத் பொன்சேகா ஜனநாயக கட்சி என்ற கட்சியை உருவாக்க நடவடிக்கை

wpengine

தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்ய தயங்க மாட்டார்கள்.

wpengine