பிரதான செய்திகள்

முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சி

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.


கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உளவியல் ரீதியாக அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஊடாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக பிரசாரங்களை முன்னெடுத்தார்.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இங்கிலாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் உள்ள தனது சொத்துக்களை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்திரிக்கா முன்னாள் ஜனாதிபதி என்ற காரணத்தினால், இலங்கை அரசாங்கம் வழங்கும் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு என்பன வாழ்நாள் முழுவதும் அவருக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வசீம் தாஜுதீன் படுகொலை! இன்னுமொரு பொலிஸ் அதிகாரிக்கு விசாரணை

wpengine

இம்மாதம் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரமாக அறிவிப்பு .

Maash

ஆபத்தான “செல்பி” எடுத்தால் சிறை தண்டனை

wpengine