பிரதான செய்திகள்

முதியோர் போட்டிகள் வவுனியாவில்

வவுனியா மாவட்ட மட்டத்திலான முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதியோர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே இந்த போட்டிகள் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளன.

 

இதன்போது, வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் வேகநடை போட்டியும், ஏனைய போட்டிகள் அலுவலக வளவிலும் நடைபெற்றுள்ளன.

இந்த போட்டியில் வவுனியா வடக்கு, வவுனியா நகரம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் சார்ந்த முதியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
சமூகசேவை உத்தியோகத்தர்களான ந.பாலகுமார், விமலேந்திரன், ச.சோபனா ஆகியோரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான தி.கலைவாணி, ஜே. செல்வமலர், எஸ்.கலைவாணி, ப.கோமளா, எஸ்.கே.வசந்தன் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தனர்.

Related posts

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் தஹ்வா கருத்தரங்கு!

wpengine

தேசிய பட்டியல் மூலம் ஏன் ரணில் பாராளுமன்றம் வர வேண்டும்.

wpengine

மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பலரிடம் பாலியல் சேட்டை! பல பெண்கள் பாதிப்பு

wpengine