பிரதான செய்திகள்

முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பது சுற்றுநிரூபம்

2018 ஆம் ஆண்டில் அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான சுற்றுநிரூபம் மற்றும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை முதலாம் தரத்திற்கு சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான அடிப்படைத் தகைமைகளின் படி, முதலாம் தரத்தின் சமாந்தர வகுப்பொன்றிற்காக மொத்தம் 38 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இவர்களின் ஐந்து பிள்ளைகள் யுத்த நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்ட முப்படைகள், பொலிஸ் உறுப்பினர்களின் பிள்ளைகளில் இருந்தும் தெரிவுசெய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அன்வர் பாடசாலை மற்றும் விடுதி வீதிகளுக்கு கள விஜயத்தினை மேற்கொண்ட பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

wpengine

அமைச்சர் றிஷாத்தை ஒழித்துக்கட்ட 4 குழுக்கள் சதி திட்டம்!!

wpengine

மஹிந்தவின் நிதிக்கு ஆப்பு வைத்த பாராளுமன்றம்

wpengine