பிரதான செய்திகள்

முதலமைச்சர் அகம்மட் நசீருக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் வழக்கு

கிழக்கு மாகாண முதலமைச்சர் அகமட்  நசீருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் சட்டத்தரணியான பீ.லியன ஆரச்சி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த மாதம் 20 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வின்போது கடற்படை அதிகாரி ஒருவரை தூற்றியதுடன், சீருடையில் இருந்த மாணவி ஒருவரை அசௌகரியத்திற்கு உட்படுத்தியதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களினதும் தனதும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனுவில் முதலமைச்சருக்கு மேலதிகமாக சட்டமா அதிபரின் பெயரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நட்டஈட்டுத் தொகையொன்றையும் வழங்க வேண்டும் என்றும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

மயானத்தை அகற்றுமாறு மக்கள் போராட்டம்! பொலிஸ் குவிப்பு

wpengine

ஹக்கீமின் அம்பாறை வருகை எப்போது திட்டமிடப்பட்டது? இதனை அறிந்து முன்கூட்டி ஓடிவந்தது யார்?

wpengine

மன்னாரில் பூபந்தாட்டம் ஆரம்பம்

wpengine